சாதிப் பெயரைக் கூறித் திட்டியதாக தலைமை ஆசிரியர் மீது புகார்.
கோவை ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பாலியல் புகார் அளித்த தனது மகளை சாதியை குறிப்பிட்டு திட்டியதாக மாணவியின் பெற்றோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
அதில் கூறியிருப்ப தாவது:
என் மகளுக்கு கடந்த ஆண்டு பள்ளி ஆசிரியர் மூலம் பாலியல் சீண்டல் நடந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதிதாக வந்துள்ள தலைமை ஆசிரியர் எனது மகளை அவரது அறைக்கு அழைத்து சென்று 20 நிமிடங்கள் வரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
சாதியை குறிப்பிட்டு, மனநிலை சரியில்லை எனவும் மகளை பேசி உள்ளார். தவிர டிசி கொடுத்து விடுவேன் என மிரட்டி அடிக்க முயற்சி செய்து உள்ளார். எனவே, தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
0 Comments