வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.

 வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம். 



கோவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மதுக்கரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.


பிச்சனூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி மாலாவின் ஓய்வூதிய பணப் பலன்களை பெற்று தர வேண்டும். மருத்துவ விடுப்பு கோரும் ஆசிரியர்களின் விடுமுறை காலம் முடியும் வரை வேறு நபர்களை பணியமர்த்தி, விடுப்பு கோரிய ஆசிரியர்களை ஊதியம் கொடுக்க வைக்கும் சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளை கைவிட வேண்டும். 


ஆசிரியர்களின் ஊதியத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பிடித்தம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மதுக்கரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சம்பந்தப் பட்ட ஆசிரியரின் ஓய்வூதியப் பணப் பலன்களை 15 நாள்களுக்குள் பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Post a Comment

0 Comments