வட்டாரக் கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

 வட்டாரக் கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.




 கோவை, அன்னுார் வட்டார கல்வி அலுவலரை கண்டித்து, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.




பிள்ளையப்பம்பாளையம் நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு, இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.


இதுகுறித்து அன்னுார் வட்டார கல்வி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், நேற்று மாலை வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கூட்டணியின் வட்டாரத் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். வட்டார செயலாளர் கலைச்செல்வி பேசுகையில், "பலமுறை வட்டார கல்வி அலுவலகத்தில் தெரிவித்தும், சம்பளம் வழங்கப்படவில்லை. சக ஆசிரியரின் வாழ்வாதாரக் கோரிக்கைக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது, என்றார். 


கூட்டணியின் மாவட்ட செயலாளர் வீராசாமி. வட்டார பொருளாளர் ரவி, உள்பட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Post a Comment

0 Comments