SMC யின் அதிகார மீறலால் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மாறுதல் பெற்றுச் சென்றனர்

SMC யின் அதிகார மீறலால் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மாறுதல் பெற்றுச் சென்றனர்.




      புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் காசிம்புதுப்பேட்டை  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து  ஆசிரியர்களும் பணிமாறுதல் பெற்றுள்ளனர்.


SMC  இன் அதிகார மீறல்

      ஒரு பள்ளியில் பணிபுரியும் ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் குற்றம்சாட்டி நீங்கள் அனைவரும் பணிமாறுதலில் சென்று விடுங்கள் எங்களுக்குத் தேவையான தலைமையாசிரியர் உள்ளிட்ட மற்ற ஆசிரியர்களை நிர்வாக மாறுதல் மூலமாகவோ பணிமாறுதல் மூலமாகவோ வரவழைத்து பள்ளியை நடத்திக் கொள்கிறோம் என்று  தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருந்ததன் விளைவாக நேற்று அனைத்து ஆசிரியர்களும் பணிமாறுதல் பெற்றுச் சென்றுவிட்டனர்.


       இத்தகைய சூழலில் இப்பள்ளியில் இயங்கி வரும் SMC குழு உறுப்பினர் தான் SMC குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியின் மாவட்டக் கருத்தாளராகச் செயல்பட்டுள்ளார் 


    இதுபோன்று எஸ் எம் சி யின் அதிகாரம் தொடரும் பட்சத்தில் அனைத்து ஆசிரியர்களும் சிரமத்திற்கு உள்ளாக கூடிய நிலை ஏற்படும்.

Post a Comment

0 Comments