🛟மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு OD வழங்கி மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு.
Click here
![]() |
| Census OD DEO order |
🛟நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி ) செயல்முறைகள் பிறப்பிப்பவர். திரு.மா.சின்னமாது எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.பில்..
ந.க.எண்: 1988/அ1/2026
நாள். 28.07. 2026
cckkalviseithikal
🛟பொருள்:
மக்கள் தொகை கணக்கெடுப்புப்பணி - ஆசிரியர்களுக்கு உரிய விடுப்பு அனுமதி கோருதல்- தொடர்பாக.
🛟பார்வை:
1. ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக் ) நீலகிரி மாவட்டம். கடிதம் நாள். 27.07.2026.
2. நீலகிரி, மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி) அறிவுரை நாள். 27.07.2026
பார்வை 1இல் காணும் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு) கடிதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ½(அரை) நாள் தற்செயல்விடுப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.
எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆகஸ்டு 2026 மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் நாட்களுக்கு ½(அரை) நாள் பிறபணியில் பணிபுரிய அனுமதி வழங்குமாறும், கட்டாயமாக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரேனும் இருப்பதையும் உறுதி செய்து கற்பித்தல் செயல்கள் பாதிக்கா வண்ணம் ஆசிரியர்களுக்கு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் அறிவுறுத்துமாறும் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக் கல்வி அலுவலர், 2 (தொடக்கக் கல்வி)
நீலகிரி மாவட்டம்

0 Comments