💫cckkalviseithikal💫
🟦பள்ளிகளில் ஆண்டாய்வு செய்ய அரைப் பவுன் மோதிரம் வேண்டும் - வட்டாரக் கல்வி அலுவலரின் அடாவடி வசூல்.
![]() |
| CCK News |
🔦பள்ளிகளில் ஆண்டாய்வு செய்ய அரைப் பவுன் நகை, பணம் தருமாறு வட்டார கல்வி அலுவலர் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
🎤இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் சேகர், பொருளாளர் உமா மற்றும் சங்க நிர்வாகிகள் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
🗞️அதில் கூறியிருப்பதாவது:
- 🍭வேலூர் மாவட்டத்தில்
- காட்பாடி
- குடியாத்தம்
- கே.வி.குப்பம்
- அணைக்கட்டு
- கணியம்பாடி
- பேரணாம்பட்டு
- வேலூர் புறநகர் மற்றும்
- வேலூர் மாநகரம் என 8 வட்டார கல்வி அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன.
🔥இதில் குடியாத்தம் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர், ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்கி வருகிறார்.
- ❌அரசு பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்ய ₹10 ஆயிரம்
- பள்ளியைப் பார்வையிட ₹2 ஆயிரம்,
- அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆண்டாய்வுக்கு ஆசிரியர்களிடம் தலா ₹5 ஆயிரம்
- தேர்வு நிலை, சிறப்பு நிலை உத்தரவுகளை வழங்க அரைப் பவுன் மோதிரம் அல்லது
- ₹20 ஆயிரம் வழங்கவேண்டும் என கேட்டு நிர்பந்திக்கிறார்.
🔥மேலும் பெண் ஆசிரியர்களிடம் பணம் வசூலிப்பதற்காக முறையற்ற வகையில் நடந்துகொள்வதும், மிரட்டுவது மற்றும் ஒருமையில் பேசுவதுமாக உள்ளார்.
⏩கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி குடியாத்தம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடந்த தலைமை ஆசிரியர் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலரை கண்டித்து தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். எனவே அவரிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

0 Comments