💫cckkalviseithikal💫 ஆசிரியர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு! ஆசிரியைகள், கல்வி அதிகாரிகளுக்கு சிறை தண்டனை.!!

💫cckkalviseithikal💫

ஆசிரியர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு! ஆசிரியைகள், கல்வி அதிகாரிகளுக்கு சிறை தண்டனை.!!



📢அரசுப் பள்ளி ஆசிரியர் மீது பொய் பாலியல் குற்றச்சாட்டு கூறிய வழக்கில் சக ஆசிரியைகள், கல்வி அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் .



CCK News 



🎯தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2012 முதல் கணித பட்டதாரி ஆசிரியராக கோகிலபாண்டியன் இருந்தார்


📌அதே பள்ளியின் ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் கோகில பாண்டியன் மீது பாலியல் புகார் அளித்தனர்.

🔶சத்துணவு அமைப்பாளர் நந்தினி என்பவர் பெயரில் காமன்கல்லுார் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், தேனி டி.இ.ஒ.. மொக்கத்துரை ஆகியோர் போலியான பாலியல் குற்றச்சாட்டு புகார் மனு தயார் செய்து முன்னறிவிப்பு இன்றி ஆசிரியர் கோகிலபாண்டியனை சஸ்பெண்ட் செய்தனர்.

🔶இதையடுத்து கோகிலபாண்டியன் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு  தொடர்ந்தார். 

🎯நீதி மன்ற உத்தரவின் படி விசாகா கமிட்டி விசாரித்தது. அதில் முன் விரோதம் காரணமாக ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் சத்துணவு அமைப்பாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து பொய் குற்றச்சாட்டு சுமத்தியதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 


💥தொடர்ந்து கோகிலபாண்டியனுக்கு சஸ்பெண்ட் காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க தேனி டி.இ.ஓ., (தொடக்கக்கல்வி உத்தர விட்டார்.


🔶ஆசிரியர் கோகிலபாண்டியன் தன் மீது பொய்யான பாலியல் குற்றச் சாட்டு தெரிவித்த வனிதா. ராமலட்சுமி, ரவிச்சந்திரன், டி.இ.ஓ., மொக்கத்துரை உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2020ல் வழக்கு தொடர்ந்தார்.


🎯இவ்வழக்கில் 
  • டி.இ.ஒ., மொக்கத்துரை, 
  • ஆசிரியைகள் வனிதா,  
  • ராமலட்சுமிக்கு 
  • தலா மூன்றரை ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதித்துறை நடுவர் பாசில் முகமது தீர்ப் பளித்தார்


  • 🔗மேலும் மற்றொரு 

  • டி.இ.ஓ., கணேஷ் என்பவருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம், 
  • டி.இ.ஒ.. நேர் முக உதவியாளர் முனியாண்டி, 
  • பி.இ.ஒ.,க்கள் ஸ்ரீதேவி, 
  • ஹெலன் மெட்டில்டா ஆகிய மூவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 


🏛️புகார்தாரர் கோகிலபாண்டியனுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments