புதிதாக நியமனம் பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 16.02.2026 முற்பகல் முதல் பணியேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
பணி நாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா 13.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதால், அன்று கலந்துகொள்ளும் 20 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் முதன்மைக்கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பபட வேண்டும். அதன் பின்னர் தனி நபர் மருத்துவ தகுதிச் சான்று பெற்று அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் 16.02.2026 அன்று திங்கட்கிழமை முற்பகல் முதல் பணி நியமன ஆணை பெற்றுள்ள பள்ளிகளில் பணியேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இது குறித்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடவும் தக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வி இயக்குநர்

0 Comments