ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது கல்வி ஆண்டு இறுதி வரை மறுநியமனம் அளிப்பது -அரசால் நிராகரிக்கப்பட்டது விவரம் தெரிவித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
பொருள்:
அரசு தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி மறுநியமனம் /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது -ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு இறுதி வரை மறுநியமனம் அளிப்பது 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டு முதல் மறுநியமனம் அடிப்படையிலான பணிநீடிப்பு வழங்குதல் - அரசாணை (நிலை) எண்.115 பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022-க்கு திருத்தம் - அரசால் நிராகரிக்கப்பட்டது விவரம் தெரிவித்தல் - சார்பாக.
பார்வை:
1. இவ்வியக்கக கடிதம், இதே எண், நாள்.03.04.2025.
2. .3618/5(1)/2025, 30.05.2025
அரசாணை (நிலை) எண்.115 பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022 -இல் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்று மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic Session) மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதை திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31-ஆம் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணை வழங்க அரசிடம் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் பார்வை 2-ல் காணும் கடிதம் மூலம் அரசாணை (நிலை) எண்.115 பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022 -இல் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31-ஆம் தேதி) வரை மறுநியமனம் செய்யும் கோரிக்கையினை ஏற்க இயலாத நிலை உள்ளது என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு - பார்வை 2-ல் காணும் அரசு கடிதம் நகல்

0 Comments