ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுரை கோரி கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு நீலகிரி மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்.

ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுரை கோரி கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு நீலகிரி மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்.

Click here




அம்மையீர்.

பொருள்

சரண் விடுப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01-10-2025 ( 15 நாட்கள் ஒப்புவிப்பு செய்வது சில தெளிவுரைகள் கோருதல் தொடர்பாக

பார்வை

1 அரசாணை எண் 35 மனிதவள மேம்பாட்டுத் (FR.III) துறை நாள் 30-06-2025.

பார்வையில் காணும் அரசாணை எண் 35 மனிதவள மேம்பாட்டுத் (FR-III) துறை நாள் 30-08-2025-ன்படி சரண்விடுப்பு அனுமதிப்பது தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றிற்கான உரிய தெளிவுரைகள் பெற்று வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அ) அரசாணையின் பத்தி 4-ல் உள்ள உதாரணத்தில் 01-04-2020 அன்று ஒப்படைவு செய்தவர் 01.04.2026 அன்று மீண்டும் ஒப்படைவு செய்யலாம் எனவும் 15-10-2019 அன்று ஒப்படைவு செய்தவர் தற்போது 15-10-2025 அன்றே ஒப்படைவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறயின் 0110-2019-க்கு முன்பே சரண்விடுப்பு செய்தவர்களுக்கு தற்போது ஒப்படைவு நாள் எந்தத்தேதியில் அமையும்?

உதாரணம்: 01.09.2019 அன்று சரண் செய்தவர் தற்போது சரண் செய்யும் நாள் 01.10.2025 அன்று அமையுமா? அல்லது 01.09.2026 அன்று அமையுமா?

குறிப்பு: இயல்பான சரண் ஒப்படைவு சுழற்சி எனப் பொருள் கொண்டு 01-09-2019-க்கு

அடுத்த தகுதி நாள் 01-09-2026 எனக் கொண்டால் 01-09-2019-இற்கு பிறகு 01-04-2020 வரை சரண்

cckkalviseithikal

செய்தவர்கள் தனக்கு முன் சரண் செய்தவர்களுக்கும் முன்னரே தற்போது பலனடையக்கூடும் என்பதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

ஆ) 01:04-2018-ல் சரண்விடுப்பு செய்தவர் 01-04-2020 அன்று 30 நாட்கள் சரண்விடுப்பு செய்யத் தகுதியானவர். ஆனால் ஒப்புவிப்பு சலுகை இடைநிறுத்தம் செய்யப்பட்டதால் நிர்வாக காரணத்தால் 30 நாட்களை ஒப்புவிக்க இயலாமல் இருப்பின்

1 அன்னார் தற்போது சரண் விடுப்பு ஒப்படைவு செய்யும் நாட்கள் 30 நாள்களா? அல்லது 15 நாள்கள் மட்டுமா?

2 01-04-2018-இல் ஒப்படைவு செய்திருப்பதால் தற்போது சரண் விடுப்பு ஒப்படைவு செய்யும் தேதி

01-10.2025 (1) 01-04-20267


இ) 27-04-2020 முதல் 30.09.2025 வரையிலான காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு 01-10-2025 முதல் விளக்கி கொள்ளப்பட்டு ஒப்படைவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக நிறுத்த காலம் தொடங்கும் முன்னரே அதாவது 27-04-2020-ற்கு முன்னரே ஈட்டிய விடுப்பு ஒப்படைவு செய்ய விண்ணப்பம் அளித்து, செயல்முறை ஆணை பிறப்பித்து / பட்டியல் கருவூலத்திற்கு அணுப்பி நிராகரிக்கப்பட்டவர்கள் விடையத்தில் அக்காலத்தில் திரண்டிருந்த ஈட்டிய

விடுப்பினை தற்போது சரண் செய்யலாமா?

ஈ) 27-04-2020 முதல் 30-09-2025 வரையிலான காலம் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பிற்கான தற்காலிக நிறுத்தக் காலம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், 01.04.2019 அன்று சரண் விடுப்பு செய்தவர்கள் 01-04-2026 அன்று 30 நாட்கள் சரண் விடுப்பு செய்யலாமா?

மேற்காணும் சந்தேகங்களுக்கான தெளிவுரைகள் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருவூல அலுவலர்

நீலகிரிமாவட்டம்

Post a Comment

0 Comments