விஜயதசமி (02.10.2025) அன்று மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
பார்வை (2) - ல் கண்டுள்ள செயல்முறைகளில் முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு/காலாண்டுத் தேர்வு கால அட்டவணை குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பார்வை (1) -ல் கண்டுள்ள 2025-26 ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டியில் தெரிவித்துள்ளபடி 26.09.2025 அன்றுடன் காலாண்டு தேர்வுகள் முடிந்து இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு, 27.09.2025 அன்று முதல் தேர்வு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், 06.10.2025 திங்கள் அன்று காலாண்டு விடுமுறை முடிந்து மீள பள்ளிகள் திறக்கப்படுகின்றன என அறிவிக்கப்படுகிறது.
மேலும் விஜயதசமி (02.10.2025) அன்று மாணவர் சேர்க்கைப் பணிகளை அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் எடுத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
cckkalviseithikal
தொடக்கக் கல்வி இயக்குநர்
0 Comments