தமிழ்நாட்டில் 500 வெற்றிப் பள்ளிகள் திட்டம் - அரசாணை வெளியீடு

 தமிழ்நாட்டில் 500 வெற்றிப் பள்ளிகள் திட்டம் - அரசாணை வெளியீடு


தமிழ்நாட்டில் 500 வெற்றிப் பள்ளிகள் திட்டம் - முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டில் 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளை வெற்றிப் பள்ளிகளாக மாற்றம் செய்திட ₹111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு


அரசு மாதிரிப் பள்​ளி​களைத் தொடர்ந்​து, அடுத்து வரும் ‘வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம்’ ஏழை மாணவர்​களின் உயர்​கல்விக்​கான பெரும் கனவு​களை வசமாக்​கும் என்று பள்ளிக்​கல்​வித் துறை செயலாளர் பி.சந்திரமோகன் தெரி​வித்தார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்​களின் கற்​பித்​தலை மேம்​படுத்​து​வதற்​காக மாதிரிப் பள்ளி திட்​டம் 2021-22-ம் கல்​வி​யாண்​டில் தொடங்கப்பட்​டது.


மாநிலம் முழு​வதும் மாவட்​டத்​துக்கு தலா ஒன்று வீதம் 38 மாதிரிப் பள்​ளி​கள் தற்​போது செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்​வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிசிடிவி கேம​ரா, முழுமையான உபகரணங்​களு​டன் கூடிய அறிவியல் ஆய்​வகம், டிஜிட்​டல் கரும்​பல​கை, விளை​யாட்டு மைதானம், நுண்​கலைத்​திறன் பயிற்​சி, உண்டு உறை​விட வசதி​கள் என மாணவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து கட்​டமைப்​பு​களும் ஒரே வளாகத்​தில் ஏற்படுத்தப்​பட்​டிருக்​கும்.


இதற்​கிடையே, இந்​தப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் ஐஐடி போன்ற தேசிய அளவிலான முன்​னணி உயர்​கல்வி நிறுவனங்களில் இடம் பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.


அதன்​படி கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் 1,878 மாணவர்​கள் முதன்மை உயர்​கல்வி நிறுவனங்​களில் இடம் பெற்​றுள்​ளனர். இதற்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்​து, இந்​தத் திட்​டத்தை ‘வெற்​றிப் பள்​ளி​கள்’ எனும் பெயரில் வட்​டார அளவில் கொண்டு செல்ல வேண்​டுமென மாநிலக் கல்விக் கொள்கையில் பரிந்​துரைக்​கப்​பட்​டது.


அதன்​படி தமிழ்நாடு முழு​வதும் உள்ள 414 வட்டாரங்​களில் 500 வெற்​றிப் பள்​ளி​கள் உருவாக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வித்​தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வட்​டாரத்​தி​லும் ஒரு சிறந்த அரசு மேல்​நிலைப் பள்ளி தேர்வு செய்​யப்​பட்​டு, அவை வெற்றிப் பள்​ளி​யாக தரம் உயர்த்​தப்பட உள்ளன. மாதிரி பள்​ளி​களில் உள்​ளதைப் போன்ற நவீன வசதி​கள் அங்கு ஏற்படுத்தப்படும். உண்​டு, உறை​விட வசதி​கள் மட்​டும் இடம்​பெறாது. அந்த பள்​ளி​யில் வாரந்தோறும் உயர்​கல்வி வழி​காட்டி வகுப்புகள் நடை​பெறும்.


நீட்,ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்​சி வழங்​கப்படும். இந்த பயிற்சி வகுப்​பு​களில் அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து பிளஸ் 2 மாணவர்​களும் தங்​கள் சுய​விருப்​பத்​தின்​படி இணைந்து பயன்​பெறலாம். இந்த வெற்​றிப் பள்​ளி​கள் மூல​மாக சுமார் 50 ஆயிரம் மாணவர்​கள் பயன்​பெறு​வார்​கள் என எதிர்பார்க்​கப்​படு​கிறது.


இதன்​மூலம் முதன்மை உயர்​கல்வி நிறுவனங்​களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்​களின் எண்​ணிக்கை மேலும் அதிகரிக்​கும். இதற்​காக பள்​ளிக்​கல்​வித் துறை ரூ.111.37 கோடி நிதி ஒதுக்​கி​யுள்​ளது. அதில் முதல்​கட்​ட​மாக, இந்​தாண்டு 236 வட்டாரங்​களில் வெற்​றிப் பள்​ளி​கள் தொடங்கும் வித​மாக ரூ.54.73 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.


அடுத்த கல்​வி​யாண்​டில் எஞ்​சிய 178 வட்டாரங்களைச் சேர்த்து மொத்​தம் 500 வெற்றிப் பள்​ளி​கள் தொடங்​கப்​படும் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரிவித்துள்​ளது. அதே​நேரம் மாதிரிப் பள்​ளி​கள் திட்​டம் சமமற்ற கல்வி முறையை ஊக்​கு​விப்​ப​தாக கல்வியாளர்​கள் சிலர் குற்​றம்​சாட்டுகின்றனர்.






இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பி.சந்திரமோகனிடம் கேட்டபோது, “அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். அவர்களின் ஏழ்மையானது, கனவுகளுக்கு தடையாக இருக்கக் கூடாது. சாமானியனுக்கும் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான வாய்ப்புகளை எந்த தடையின்றி வழங்குவதற்காகவே இந்த மாதிரிப் பள்ளிகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.



அதை பரவலாக்கும் விதமாக ஒவ்வொரு வட்டாரத்திலும் வெற்றி பள்ளிகள் நிறுவப்பட்டு, மாதிரி பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித்தரம் மேம்படுத்தப்பட உள்ளது. திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை பெறுவார்கள்.




மேலும், அரு​கிலுள்ள பள்​ளி​களுக்கு வழிகாட்டு​தலை​யும் வழங்​கி, ஒட்​டுமொத்த தரத்தை உயர்த்த வழி​வகுக்​கும். படிப்​படி​யாக அனைத்து பள்​ளி​களை​யும் வெற்​றிப் பள்ளிகளாக மாற்​று​வதற்​கான இலக்கு நிர்ணயிக்கப்படும். எனவே, இது சமமற்ற கல்வி முறையல்​ல; ஏழை மாணவர்​களின்​ பெரும்​ கனவு​களை வசமாக்​கும்​ ​முயற்​சி” என்றார்​.




Post a Comment

0 Comments