அரசுப் பணியாளர்களுக்கு தகுதி (Merit) அடிப்படையில் முதுநிலை (Seniority) நிர்ணயம் செய்து பதவி உயர்வு !! - குழு அமைப்பு.
அரசுப் பணியாளர்களுக்கு தகுதி (Merit) அடிப்படையில் முதுநிலை (Seniority) நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் தடைபடும் சமூக நீதி குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க குழு அமைத்து அரசாணை வெளியீடு.
Click here
இக்குழு, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.
ii. ஆய்வு வரம்பு (Terms of references தொடக்கம் முதல் தமிழகத்தில் அரசு
cckkalviseithikal
வேலைகளில் நேரடி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் பட்டியலினத்தவர்/ பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு 200 புள்ளி சுழற்சி முறை (200 point roster) பின்பற்றப்பட்டு, அவர்களது முதுநிலையானது சுழற்சி முறை அடிப்படையிலும் அந்தந்தப் பிரிவினருக்குள் தகுதியின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.
அதன் மூலம் அரசுப் பணியாளர்களின் அனைத்துப் பிரிவினருக்கும் பதவி உயர்வில் சமூக நீதி நிலை நாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், தகுதி (merit) அடிப்படையில் தான் பணி முதுநிலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டி தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு எண் C.P(C)Diary No.6415/ 2021 மற்றும் தொகுதி வழக்குகளில், மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 18.04.2023 நாளிட்ட தீர்ப்பில் 10.03.2003 அன்று முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியாக தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் தகுதி (merit) அடிப்படையில் பணியில் முதுநிலை நிர்ணயிக்கும் وانا ஆணையிட்டது.
அதனால், பதவி உயர்வில் அரசுப் பணியாளர்கள் அனைத்துப் பிரிவினர்களுக்கும் சமமான பங்களிப்பு கிடைக்கப் பெறாமல் போதுமான சமூகநீதி வாய்ப்பு தடைப்பட்டுள்ளது. ஆகையால், ஏற்கெனவே இருந்த நடைமுறைகள், தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு. வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவை குறித்து உரிய தரவுகளுடன் ஆழமாக ஆய்வு செய்து. வருங்காலங்களில் அனைத்துப் பிரிவினருக்கும் அரசுப் பணிகளில் சமூக நீதியை நிலை நாட்டும் வண்ணம் சட்ட ரீதியான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை குழு செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து 3 (மூன்று) மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிக்கும்படி குழு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments