ஆசிரியர்களை அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

 ஆசிரியர்களை அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

Click here




பார்வையில் காணும் இணையவழி கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியவாறு, கீழ்க்காணும் விவரங்கள் அனைத்து அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலை / தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

1) திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பள்ளி வேலை நேரத்தில் கற்பித்தல் பணிகள் தவிர்த்து பிற அலுவலக பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. 

மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அறிவுறுத்தலை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவிக்குமாறு


2) திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் EMIS பணிகளை தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட EMIS ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு பள்ளியில் இளநிலை உதவியார்-1, ஆய்வக உதவியாளர்-1 ஆகிய இருவருக்கு EMIS சார்ந்த அனைத்து பதிவுகள் மேற்கொள்வது குறித்து ஒன்றிய அளவில் பயிற்சி தரப்படும். 


மேற்காணும் இரு பணியாளர்கள் அவர்களின் ஒன்றியத்தில் உள்ள மற்ற இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சிகளை தரவேண்டும் என இத்துடன் தெரிவிக்கப்படுகிறது.


cckkalviseithikal

முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை.

Post a Comment

0 Comments