அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறை களைவு மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாணை வெளியீடு.
Click here
மேலே ஒன்று முதல் மூன்று வரை படிக்கப்பட்ட அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதத்தில் குறைகளைவு மனுக்களைக் கையாளுதல் குறித்துப் பல்வேறு அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
(த.பி.பா.)
2
cckkalviseithikal
2. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட 01.08.2014 ஆம் நாளிட்ட நீதிமன்றத் தீர்ப்பிற்கிணங்க வெளியிடப்பட்ட ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாகப் பெறப்படும் குறைகளைவு மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மூன்று (3) நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறை களையப்படல் வேண்டும். மேற்படி நடைமுறைகள், மேலே ஆறாவதாக மற்றும் எட்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதங்களின் வாயிலாக மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
3. இதனைத் தொடர்ந்து, நீதிப்பேராணை மனு எண்.32798/2024-இல் சென்னை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட 14.11.2024-ஆம் நாளிட்ட உத்தரவின் அடிப்படையில், மேலே ஒன்பதாவதாகப் படிக்கப்பட்ட தலைமைச் செயலாளரின் நேர்முகக் கடிதம் வாயிலாக குறைகளைவு மனுக்களைக் கையாளுதல் குறித்தப் பல்வேறு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்களைத் தவறாது பின்பற்றுமாறும், மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அனைத்துத் துறைச் செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.
4. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மேலே பத்தாவதாகப் படிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழ்க்காணுமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது:-
************This Court expects that such delays shall be avoided in future, so that citizens can get timely responses from the Government authorities, rather than resorting to legal action. Hereinafter, the Authorities concemed are directed to comply with the directions of this Court in its letter-and-spirit, failing which, this Court will take serious action against those erring officials. Further, if any order is passed by the officials after the filing of the contempt petition, the same will not be considered by this Court.
5 6. The Registry is directed to send a copy of this order to the Chief Secretary of the Government of Tamil Nadu, Secretariat, Chennai, who in tum shall issue necessary proceedings to all the Government officials for strict compliance of the orders that would be passed".
5. அரசாணை மற்றும் அரசுக் கடிதங்கள் மட்டுமின்றி நீதிமன்றத் தீர்ப்புகளைக் குறிப்பிட்டுத் தொடர்ந்து அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டிருப்பினும், குறைகளைவு மனுக்களை முறையாகத் தீர்வு செய்தலில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை மேற்படி 12022025-ஆம் நாளிட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சுட்டிக்காட்டுகிறது.
6. எனவே, அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைகளைவு மனுக்களைக் கையாளும்போது மேலே படிக்கப்பட்ட அரசாணைகள்/அரசுக் கடிதங்களில் வகுத்தளிக்கப்பட்ட, அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்பட வேண்டும் என ஆணையிடப்படுகிறது.
3
3
cckkalviseithikal
7. நடைமுறைகளும் அறிவுறுத்தங்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட, அனைத்து அரசு அலுவலகங்களும் அலுவலகத்தில் பெறப்படும் குறைகளைவு மனுக்களைப் பதிவு செய்திட, குறைகளைவு மனுப்பதிவேடு- ஒன்றினை இவ்வரசாணையின் பின்இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ளவாறு பராமரித்தல் வேண்டும்; அப்பதிவேட்டில், அம்மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்திடல் வேண்டும்; அப்பதிவேட்டினை மாத இறுதியில் அவ்வலுவலகத் தலைமை அலுவலர் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்திட ஆவன செய்திடல் வேண்டும்: மேற்படி குறைகளைவு மனுப்பதிவேடு". அத்துறையின் துறைரீதியிலான வார/இருவார / மாதாந்திர ஆய்வு மற்றும் மனித வள மேலாண்மை (ஆய்வு)த் துறையின் வருடாந்திர ஆய்வுகளின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் ஆணையிடப்படுகிறது.
0 Comments