பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் (ஜூன் 23 -27, 2025) அனுசரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


Click here





பார்வையில் காணும் கடிதத்தின்படி தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை உலக போதைப் பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் எதிரான மாநில அளவிலான விழிப்புணர்வு வாரத்தை "போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் (Drug- free awareness week) என்ற தலைப்பில் ஜூன் 23 முதல் ஜீன் 27 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது

போதைப்பொருள் இல்லாத விழிப்புணர்வு வார திட்டம் (ஜூன் 23-27,2025)

போதை இல்லா தமிழகம்

வாரத்தின் தலைப்பு : "என் எதிர்காலம், என் தேர்வு - போதைப்பொருள் வேண்டாம் என்று சொல்லுங்கள்."

cckkalviseithikal

இந்த வாரம், வகுப்பு 6 முதல் 12 வரை உள்ள மாணவர்களிடையே, போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு எளிய, சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட செயல்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளுக்கு கூடுதல் வளங்கள் அல்லது வெளியிலிருந்து ஏற்பாட்டாளர்கள் தேவையில்லை; பள்ளியின் வழக்கமான நிகழ்ச்சிகளில் எளிதாக இணைக்கலாம்.

எல்லா செயல்பாடுகளும், பள்ளிகளில் ஏற்கனவே உள்ள போதை எதிர்ப்பு மன்றங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இந்த மன்றங்கள். மாணவர்களையும். ஆசிரியர்களையும், விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபடுத்தும். இதன் மூலம் முழு பள்ளி சமூகமும் போதைப்பொருள் இல்லாத சூழலை உருவாக்குவதில் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுவதை உறுதி செய்யலாம்.


Post a Comment

0 Comments