நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக BEO பதவி உயர்வு பெறுபவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்தல் சார்ந்து அரசின் தெளிவுரைக் கடிதம்.
Click here
பார்வையில் காணும் கடிதங்களின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
2. பார்வை 3-ல் காணும் தங்களது 21.11.2023 நாளிட்ட கடிதத்தில், பார்வை 1 மற்றும் 2-ல் காணும் அரசாணை வெளியிடுவதற்கு முன்னர் வரை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்களாக தற்போது வரை பணிபுரிந்து வருவபவர்களுக்கு பார்வை 2-ல் காணும் அரசாணையில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியினை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்து ஆணையிடப்பட்டதன் அடிப்படையில் அவர்களுக்கு அடிப்படை விதி 22 B-இன்படி தற்போது ஊதிய நிலை 17-ல் பெறும் ஊதியத்தில் ஒரு ஊதிய உயர்வு அனுமதித்து அதன் பின்பு ஊதிய நிலை 18-ல் ஊதியம் நிர்ணயம் செய்யலாமா என்பதற்கு தெளிவுரை வழங்குமாறு கோரப்பட்டது.
(த.பி.பா.)
cckkalviseithikal
2
3. இந்நேர்வு தொடர்பாக பார்வை 4-ல் காணும் 29.02.2024 நாளிட்ட அரசுக் கடிதத்தில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் "பதவி உயர்வு" பணியிடமாக 07.02.2019 முதல் கருதப்படுவதால், அப்பதவி உயர்வு பணியிடத்திற்கான ஊதிய நிர்ணயம் அந்நாளிலிருந்தே அனுமதிக்கப்படும். எனவே 07.02.2019-க்கு முன்னர் பணி மாறுதல் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்களாக சென்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அடிப்படை விதி 22B-ன்படி ஊதிய நிர்ணயம் செய்திட வழிவகை இல்லை என அரசால் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
4. பார்வை 3-ல் காணும் 23.05.2024 நாளிட்ட தங்களது கருத்துருவினை பரிசீலிக்க ஏதுவாக 23.08.2024 நாளிட்ட அரசுக் கடிதத்தில் கீழ்க்காணும் கூடுதல் விவரங்களுடன் உரிய பரிந்துரைகளுடன் உள்ளடக்கிய முழுமையான கருத்துருவினை அரசுக்கு அனுப்புமாறு கோரப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பதிலறிக்கை ஏதும் பெறப்படவில்லை.
1 தங்களது கருத்துருவில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து, உதவி தொடக்கக்கல்வி அலுவலராக ஏற்கனவே பணிமாறுதல் செய்யப்பட்டவர்கள் 07.02.2019 அன்று பதவி உயர்வு ஊதியம் நிர்ணயம் செய்வதற்கு பதிலாக, அரசாணை (நிலை) எண்:19, பள்ளிக்கல்வி (தொடக்கக்கல்வி), बी: 07.02.2019-வெளியிடுவதற்கு முன்னர், அதாவது 85-600TL அரசாணை 07.02.2019-க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் மாற்றுப் பணியில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் சேர்ந்த நாள் முதல் பதவி உயர்வில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பாக தணிக்கை தடைகள் ஏற்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 07.02.2019-க்கு முன்னர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் மாற்றுப் பணியில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் சேர்ந்த நாள் முதல் பதவி உயர்விற்குரிய ஒரு ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம். தவறுதலாக
அவர்களில் எத்தனை நபர்கள் தற்போது ஓய்வுபெற்றுள்ளனர். எத்தனை அலுவலர்களுக்கு தணிக்கைத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரம்.
07.02.2019-க்கு முன்னர் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் சேர்ந்த நாள் முதல் பதவி உயர்விற்குரிய ஒரு ஊதிய உயர்வு தவறுதலாக அனுமதிக்கப்பட்டவர்களிடமிருந்து பிடித்தம் (Recovery) மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரம்.
iv. பார்வை 1-ல் காணும் அரசாணை வெளியிடப்பட்ட 07.02.2019 முன்னர் எந்த காரணங்களின் அடிப்படையில் பணி மாறுதல் மூலம் சென்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அடிப்படை விதி 22B-ன்படி தவறுதலாக மாவட்ட கல்வி அலுவலர்களால் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. அவ்வாறு தவறுதலாக ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்த விவரம்.
cckkalviseithikal
3.
V.
தங்களது கருத்துருவில் கோரியவாறு 07.02.2019 அன்றைய தேதியில் வட்டராக் கல்வி அலுவலராகப் பணிபுரியும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் 07.02.2019 முதல் பதவி உயர்வுற்குரிய ஒரு ஊதிய உயர்வு அனுமதித்தால் அரசுக்கு கூடுதல் செலவினம் குறித்த விவரம் மற்றும் அவ்வாறு அனுமதிப்பதற்கு தேவையான விளக்கங்கள் (Justifications).
5. இந்நிலையில், இதே கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கத்தினடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது (நகல் இணைக்கப்பட்டுள்ளது). எனவே இந்நேர்வு குறித்து அரசளவில் பரிசீலனை செய்திட எதுவாக இப்பொருள் குறித்து பார்வை 4-ல் காணும் அரசுக் கடிதத்தில் கோரிவாறு கூடுதல் விவரம் மற்றும் உரிய பரிந்துரைகளுடன் முழுமையான கருத்துருவினை உடன் அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள, /- XXXXX
அரசு துணைச் செயலாளர்
0 Comments