மாநில அளவிலான அடைவுத்தேர்வு SLAS முடிவுகள் வெளியானது.
Click here
மாநில திட்டக்குழு
மாநில அளவிலான அடைவுத் தேர்வு (ST.AS) 2025
மாநில திட்டக் குழுவின் மேற்பார்வையில், சமக்ர சிக்ஸா மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் அனைத்து இயக்ககங்கள் இணைந்து தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,5 மற்றும் 8ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிடவும், மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான திட்டமிடலை மேற்கொண்டு, அதற்கேற்ற உத்திகளை வடிவமைக்கும் பொருட்டும் மாநில அளவிலான அடைவு ஆய்வினை மேற்கொண்டது.
மாணவர்களின் பங்கேற்பு விவரங்கள்:
மாநில அளவிலான அடைவுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி மாதம் 4,5.6 ஆகிய தேதிகளில் முறையே 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்பட்டது.
மாதிரிக்கூறின் (Sampling) அடிப்படையில், 3 மற்றும் 5ஆம் வகுப்புகளில் ஒரு வகுப்பிற்கு அதிகபட்சமாக 20 மாணவர்கள், 8 ஆம் வகுப்பில் ஒரு வகுப்பிற்கு அதிகபட்சமாக 30 மாணவர்கள் என மொத்தம் 9,80,341 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர் இந்த எண்ணிக்கையானது 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் உள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையில் 66% ஆகும்.
இத்தேர்வில் மூன்றாம் வகுப்பில் 36,829 பள்ளிகளைச் சேர்ந்த 3,08,701 மாணவர்களும்,
ஐந்தாம் வகுப்பில் 36,829 பள்ளிகளைச் சேர்ந்த 3,43,270 மாணவர்களும்,
எட்டாம் வகுப்பில் 16.354 பள்ளிகளைச் சார்ந்த 3,28,370 மாணவர்களும் பங்கேற்றனர்.
வினாத்தாள் வடிவமைப்பு:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பின்வருமாறு தமிழ்வழியில் 4 வினாத்தாள் தொகுப்புகளையும் ஆங்கிலவழியில் 4 வினாத்தாள் தொகுப்புகளையும் வடிவமைத்தது.
cckkalviseithikal
1
3ஆம் வகுப்பிற்கு தமிழ் ஆங்கிலம், கணிதம் மற்றும் சூழ்நிலையியல் ஆகிய பாடங்களில் இருந்து 35 வினாக்களும்,
5ஆம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 45 வினாக்களும்,
8ஆம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 50 வினாக்களும் இடம்பெற்றன.
இத்தேர்வில் OMR விடைத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு மாணவர்களின் அடைவு சோதிக்கப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்கள் பதிலளிப்பதற்கான கால அளவு 90 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
அடைவுத்தேர்வு நடத்துதல்: வினாத்தாட்கள் மற்றும் OMR விடைத்தாட்கள் மாவட்டங்களில் உள்ள வினாத்தாள் கட்டுக் காப்பகங்களுக்கு அனுப்பும் பணி அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் மேற்கொள்ளப்பட்டது.
இத்தேர்வினை நடத்துவதற்கு கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 38,670 மாணவர்கள் கள ஆய்வாளர்களாகச் செயல்பட்டனர். தேர்வு நடத்தப்பட்ட பிறகு, OMR தாள்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் ஸ்கேன் செய்யப்பட்டன.
அடைவு ஆய்வு முடிவுகளின் பகுப்பாய்வு விவரங்கள் பின்வருமாறு:
3ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் 67%, ஆங்கிலப் பாடத்தில் 69%, கணிதப் பாடத்தில் 54% மற்றும் சூழ்நிலையியல் பாடத்தில் 76% அடைவினைப் பெற்றுள்ளனர்.
இவற்றுள் தமிழ் சூழ்நிலையியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அடைவுத் தேர்வின் தேசிய சராசரி மற்றும் மாநில சராசரி ஆகியவற்றைக் காட்டிலும் தற்போதைய அடைவுத்திறன் மேம்பட்டு உள்ளது.
இதைப் போலவே 5ஆம் வகுப்பிற்கான ஆய்வு முடிவுகளில் தமிழ்ப் பாடத்தில் 76% ஆங்கிலப் பாடத்தில் 51% சூழ்நிலையியல் பாடத்தில் 57% கணிதப் பாடத்தில் 57% கற்றல் அடைவினைப் பெற்றுள்ளனர்.
2
cckkalviseithikal
இவற்றுள் தமிழ், சூழ்நிலையியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தேசிய அடைவுத் தேர்வின் தேசிய சராசரி மற்றும் மாநில சராசரி ஆகியவற்றைக் காட்டிலும் தற்போதைய அடைவுத்திறன் மேம்பட்டு உள்ளது.
3 மற்றும் 5ஆம் வகுப்புகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாநில அடைவுத் தேர்வின் முடிவுகள் மேம்பட்டிருப்பதற்கு நமது மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள / முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகள் முக்கிய காரணமாக விளங்குவது தெளிவாகிறது.
8ஆம் வகுப்பிற்கான ஆய்வு முடிவுகளை உற்று நோக்கும்போது தமிழ்ப் பாடத்தில் 52% ஆங்கிலப் பாடத்தில் 39% கணிதப் பாடத்தில் 38%, அறிவியல் பாடத்தில் 37%, சமூக அறிவியல் பாடத்தில் 54% கற்றல் அடைவினைப் பெற்றுள்ளனர்.
இவற்றுள் தமிழ் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேசிய அடைவுத் தேர்வின் தேசிய சராசரி மற்றும் மாநில சராசரி ஆகியவற்றைக் காட்டிலும் தற்போதைய அடைவுத்திறன் மேம்பட்டு உள்ளது.
0 Comments