பழைய ஓய்வூதியத் திட்டம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு - சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புகளின் விவரம்

 பழைய ஓய்வூதியத் திட்டம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு - சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புகளின் விவரம்.




💫இன்று 28.04.2025 சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த ஆசிரியர்கள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் விவரம். 


💫ஈட்டிய விடுப்பை 01.10.2025 முதல் ஒப்படைப்பு செய்து பணமாகப் பெறலாம். 


💫அகவிலைப்படி 2% உயர்த்தி 01.01.2025 முதல் வழங்கப்படும்.


💫பழைய ஓய்வூதி திட்ட அறிக்கை செப்டம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்படும்.


💫மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். 


 💫விழா முன்பணம் 10,000/- என்பது 20,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.


💫ஓய்வூதியர்களுக்கு விழா முன்பணம் 4,000/- இல் இருந்து 6,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.


💫அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 


💫பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ 500/- இருந்து ₹ 1000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.


💫அரசு ஊழியர்களின் பிள்ளைகளின் தொழிற்கல்வி படிப்புக்கான முன்பணம் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 


💫அரசு ஊழியர்களின் பிள்ளைகளின் கலைக்கல்லூரி, மற்ற படிப்புகளுக்கு 50,000 வரை முன்பணம் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments