💫 cckkalviseithikal ⭐கலைத் திருவிழா - குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்.

 💫cckkalviseithikal ⭐கலைத் திருவிழா - குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்.

Click here




✨2024-2025 ஆம் ஆண்டில், 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

🌟பார்வை-2ல் காணும் செயல்முறைகளின்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான குறுவள மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் EMIS தளத்தின் வாயிலாகவே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

cckkalviseithikal

🌟தற்போது இம்மாணவர்களுக்கான குறுவள மற்றும் வட்டார அளவிலான போட்டிகளை நேரடியாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், குறுவள அளவிலான போட்டிகளை 14-10-2024 முதல் 16-10-2024 வரை திட்டமிட்டு நடத்திடல் வேண்டும்.

🌟பள்ளியளவில் நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர் மட்டுமே அடுத்த நிலை போட்டியான குறுவள அளவிலான போட்டியில் பங்குபெறுதல் வேண்டும். (அதாவது ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்த ஒருவர் அல்லது ஒரு குழு மட்டுமே அடுத்த நிலை போட்டியான குறுவள அளவிலான போட்டியில் பங்குபெற வேண்டும்).

🌟வட்டாரத்திலுள்ள ஒவ்வொரு குறுவளமையங்களில் எங்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்ற தகவல் முன்கூட்டியே சார்ந்த குறுவள பள்ளிகளுக்கு சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் மூலம் தெரிவிக்கப்படுதல் வேண்டும். இக்குறுவள அளவிலான போட்டிகளை திட்டமிட்டு நடத்துவது சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும்.

🌟பள்ளி குறுவள அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச்சென்று மீண்டும் கொண்டுவந்து சேர்த்தல் சார்ந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

🌟பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று குறுவள அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் (Consent Letter from Parent) கட்டாயமாக பெறப்படுதல் வேண்டும். அவ்வாறாக பெறப்படும் ஒப்புதல் கடிதங்களை முறையாக பராமரித்தல், சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்பாகும். குறுவளமையப் போட்டிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும்போது உடன் ஆண் ஆசிரியர் ஒருவர். பெண் ஆசிரியை ஒருவர் செல்லுதல் வேண்டும்.

cckkalviseithikal



Post a Comment

0 Comments