புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.

 புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.




மத்திய அரசு ,தமிழ்நாடு அரசை ,தேசிய கல்விக் கொள்கை 2020 ஏற்றுக்கொள்ள வேண்டும் என மீண்டும் கூறியுள்ளது.


சமக்கிரா சிக்க்ஷா அபியான்(SSA)திட்டத்தின் கீழ்  சுமார் 750 கோடி நிதியை விடுவிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டதற்கு மேற்கண்ட முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ( informal report கூறுகிறதாம் ....


இதை தான் Carrot and Stick approach என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.....


SSA வின்நோக்கம் அனைவருக்கும் பள்ளிக்கல்வி .... பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் தரமான கல்வி ....


(ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை )


இந்த திட்டத்தில் நடப்பு ஆண்டில் மத்திய அரசின் பங்கு 2152 கோடி

மாநில அரசின் பங்கு 1434 கோடி ....(கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது )


இந்த தொகையை வைத்து தான் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலை கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க உதவுகிறதாம் ...


மத்திய கல்வி வாரியத்திலிருந்து மாநில அரசிற்கு (தமிழ்நாடு)தேசிய கல்விக் கொள்கை 2020யை

ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது ...


(PM SHRI) ... 

Prime minister' s school for rising India....


தேசிய கல்விக் கொள்கை 2020 ன் முக்கிய நோக்கம்PM SHRI 

School s ஐ இரண்டு ஆண்டுகளுக்குள் 14,500 க்கும் அதிகமான பள்ளிகளை 20 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களுடன் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் ..... என்பது ...


மேலும் இதன் முக்கிய நோக்கம்... இது ஒரு மாதிரி பள்ளிகளாகவும் மற்ற பள்ளிகளுக்கு ஒரு உதாரணமாகவும் மற்ற பள்ளிகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும் அமைய வேண்டும் என்பது ...


தமிழக அரசு PMSHRI

திட்டத்தில் ஆதரவாக இருந்தாலும் தேசிய கல்வி கொள்கை 2020க்கு விருப்பம் தெரிவிக்காமல் இருக்கிறது ....


இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் ....


 மொழி கொள்கை...


பள்ளியில் சேரும் மாணவர்களுக்கான நுழைவு வயதை  அதிகரித்திருப்பது...


ஆறாம் வகுப்பு முதலே .... தொழில் கல்வி அறிமுகப்படுத்துவது ...



விளக்கம்...


தேசிய கல்விக் கொள்கை 2020 மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது....


மேலும் 5 + 3 + 3 + 4 ...


5+ என்பது

பால்வாடி

LKG

UKG

Ist std

2nd Std


3+ என்பது

3rd standard 

4th standard 

 5th standard 



3+ என்பது

6th standard 

 7th standard 

 8th standard 


4+ என்பது 

9th standard 

10th standard 

 11th standard 

 12th standard


5+3+3+4.... இது தேசிய கல்விக் கொள்கை 2020 இன் படி ஏற்படுத்தப்பட்ட கற்பித்தல் வகுப்புகள்....



ஆனால் தமிழ்நாட்டில் இரண்டு மொழிக் கொள்கை....


 ஒன்றாம் வகுப்பிற்கு சேர்வதற்கு ஐந்து வயது ....


 தொழில் கல்வி 11ஆம் வகுப்பில்அறிமுகம் ....


5 + 3 + 2 +2 ....

 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்க கல்வி ...(ஐந்து ஆண்டுகள் )


ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை நடுநிலைக் கல்வி ...

(மூன்று ஆண்டுகள் ...)


9 வகுப்பு10 வகுப்பு இடைநிலை கல்வி ...

(இரண்டு ஆண்டு கல்வி ...)


11 ம் வகுப்பு மற்றும் 12வகுப்பு மேல்நிலைப்பள்ளி ....


(இரண்டு ஆண்டு கல்வி ...)


5 + 3 + 3 + 2...


மேலும் மத்திய கல்வி வாரியம் ...சமக்கர சிக்க்ஷா அபியான் திட்டத்தின் மறு கட்டமைப்பு தான் இந்த தேசிய கல்விக் கொள்கை எனவும் கூறுகிறது....


ஆதாரம் ..ஹிந்து நாளிதழ் தேதி ஆகஸ்டு 10. 2020

Post a Comment

0 Comments