நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில முன்னுரிமையும்.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடம் சுமார் 1200 இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் 12000 பேர் மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வுக்கு தயாராக உள்ளனர்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒன்று அல்லது இரண்டு காலிப் பணியிடங்கள் உள்ளன
மாநில முன்னுரிமையில் முதலில் உள்ள இரண்டு பேர் அந்த ஒன்றியங்களில் உள்ள காலி பணி இடத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது மீதி உள்ளவர்கள் அனைவரும் அடுத்த ஒன்றியம் அல்லது அடுத்த மாவட்டத்திலுள்ள காலிப் பணியிடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிக பணித்துறப்பு செய்ய வேண்டும்.
இதனால் ஜூனியர் ஆக உள்ளவர்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மீண்டும் மூன்று ஆண்டுகள் கழித்து இதே நிலைதான் தொடரும். போதும் ஒரு சிலருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் மற்றவர்கள் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்க வேண்டும்.
மொத்த நடுநிலைப் பள்ளிகள் 6941
தற்போதைய HMs 5760.
தற்போது காலியாக உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் 1181
ஓய்வு பெறப்போவோர் விபரம்
31.5.24 - 231 பேர்
31.5.25 - 447
31.5.26 - 568
31.5.27 - 624
31.5.28 - 742
31.5.29 - 809
31.5.30 - 839
31.5.31 - 653
31.5.32 - 210
31.5.33 - 94
31.5.34 - 89
31.5.35 - 99
31.5.36 - 62
31.5.37 - 66
31.5.38 - 19
31.5.39 - 32
31.5.40 - 27
31.5.41 - 31
0 Comments