மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 'நம்ம ஸ்கூல்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 'நம்ம ஸ்கூல்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்


சென்னை


தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.






பொதுமக்களும் அரசும் இணையும் இந்த முன்னெடுப்பு 'நம்ம ஸ்கூல்' திட்டம் என்று அழைக்கப்படுகிறது. டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. வேணு சீனிவாசனை தலைவராகவும், செஸ் கிராண்ட் மாஸ்டர் திரு.விஸ்வநாதன் ஆனந்தை நல்லெண்ணத் தூதராகவும் இந்த முயற்சியில் இணைந்துள்ளனர்.


முன்னாள் மாணவர்கள், உள்ளூர்ச் சமூகம் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை அரசுடன் இணைந்து செயலாற்றுவதற்கான தளத்தை உருவாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.



இணையதள முகவரி👇👇👇

Click here



நிகழ்வை துவக்கி வைத்து பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அரசுப் பள்ளிகள் அரசின் சொத்து மட்டுமல்ல. மக்களின் சொத்தும்தான் நமது மாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கு துணை நிற்பதற்காக ஒன்றிணைய விரும்பும் அனைவருடனும் கைகோர்க்க அரசு விழைகிறது. இம்முயற்சிக்கென பெறப்படும் பங்களிப்பு அனைத்தும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே செலவிடப்படும்" எனத் தெரிவித்தார்.




செய்திக் குறிப்பு👇👇👇

Click here


நம்ம ஸ்கூல்' திட்டத்தில் பெறப்படும் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வெளிப்படைத்தன்மையையும் நிர்வகிக்க உயர் அலுவலர்களைக் கொண்ட குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளம் மூலம் பள்ளிகளின் தேவைகள் பார்வைக்கு வைக்கப்படும். ஒவ்வொரு பள்ளி குறித்தும் இணையதளத்திலேயே மெய்நிகர் சிற்றுலாவும், 'நிதியுதவிக்கு முன்னும், நிதியுதவிக்குப் பின்னும்' என தகவல்களை புகைப்படங்களோடு பெறவும் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தவும் இந்த இணையதளத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியையும் உடன்பயின்ற நண்பர்களையும் தங்களுக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களை தொடர்புகொள்ளவும் இத்திட்டம் உதவும்,

https://cckkalviseithikal.blogspot.com




இத்திட்டத்திற்கு வழங்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் இணையவழியில் எளிதாக வழங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொடையாளர்கள் தாங்கள் இருக்குமிடத்தில் இருந்தபடியே அளித்த நிதி எந்தப் பள்ளியில் எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்ற தகவல்களை அறியும்வண்ண பயனீட்டுச் சான்றிதழை இணையவழியாகவே பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments