நடுநிலைப் பள்ளிகளில் ரூ.500 கோடி மதிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன

 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.500 கோடி மதிப்பில், அதிநவீன வசதிகளுடன்கூடிய உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக்கல்வித் துறை தீவிரப்படுத்தியுள்ளது.


மத்திய அரசின் நிதியுதவி மூலம் அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன, மாணவர்கள் இணைய வசதியுடன் கல்வி கற்கும் வகையில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம்  (ஹை-டெக் லேப்) அமைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக 6,029 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இவை அமைக்கப்பட்டன. தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளில் ரூ.500 கோடி மதிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


அவற்றில் கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ள 1,784 நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் ஹை-டெக் லேப் அமைக்கப்பட்டுவிடும்.

ஒவ்வொரு பள்ளிக்கு தலா 10 கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். இந்த ஆய்வகங்கள் அனைத்தும் ‘க்ளவுடு கம்ப்யூட்டிங்’ மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அவற்றை நேரடியாக ஆய்வு செய்யமுடியும். கற்றல், கற்பித்தல் வளங்களையும் பகிரலாம். மேலும், ஆய்வகத்தில் இணையதள பயன்பாட்டு வேகமும் அதிகரிக்கப்படும்.

பாடப் புத்தகங்களில் உள்ள QR கோடு வசதியை மாணவர்கள் கணினி வழியாக பயன்படுத்தி, கூடுதல் தகவல்களை அறியலாம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை வாரந்தோறும் 2 பாட வேளைகள் கணினி பயிற்சிக்கு ஒதுக்கப்படும்.




Post a Comment

0 Comments