அகவிலைப்படி நிலுவைத் தொகை பெறுவதில் சிக்கல்

அகவிலைப்படி நிலுவைத் தொகை பெறுவதில் சிக்கல்.


அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு வழங்கிய அகவிலைப்படியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாததால் அகவிலைப்படி நிலுவைத் தொகை தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.




தமிழகத்தில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நடத்திய பல்வேறு கட்ட போராட்டத்தால் அகவிலைப்படி தொகை ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள நிலுவைகளை ஏப்ரல் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது.


ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளம் களஞ்சியம் இணையதளத்தின் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி நிலுவைத்தொகை பெறுவதற்காக 'கால் வெப் ஐபி.' என்ற ஐ.டி யில் சென்று பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதில் முழுமையாக பதிவேற்றம் செய்ய முடியவில்லை. பலரது நிலுவை தொகைகள் கணக்கில் ஏறவில்லை. ஒருவருக்கு இரு முறை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இப்படி முழுமை பெறாததால் ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கியும் அதனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments