பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துதல் சார்ந்து தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு.
Click here
என் பள்ளி! என் பெருமை!!
cckkalviseithikal
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றி வரும் அரும் தொண்டுகளையும், செயல்படுத்தி வரும் சிறப்பான நலத்திட்டங்களையும் மாணவர் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் பல்வேறு கலைப் போட்டிகளை நடத்துகிறது.
இப்போட்டிகளில் இன்றைய மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் கல்விக் கண் திறந்த காமராசர். அவர் பிறந்த ஜூலை 15ஆம் நாளை "கல்வி வளர்ச்சி நாள்" என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2006ஆம் ஆண்டு அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பள்ளிகளில் "கல்வி வளர்ச்சி நாள்" கொண்டாடப்பட்டு வருகிறது.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அளித்த முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்து, மாணவர்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை வளர்க்கவும். அவர்கள் கல்வி கற்க ஊக்கப்படுத்திடவும் கல்வி வளர்ச்சி நாள் ஒரு நாள் வாய்ப்பாக அமைகிறது.
இத்திருநாளில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி தொடர்பான போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் முதலியவை நடத்தப்படுகின்றன.
கல்வி என்பது ஒரு மனிதரின் வாழ்க்கையிலும், சமூகத்தின் வளர்ச்சியிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கல்வி, தனி மனிதனின் அறிவு, திறன் மற்றும் விழுமியங்களை மேம்படுத்துகிறது. மேலும், தனிமனிதர்கள் தம் வாழ்க்கையில் வெற்றி பெறவும், அதன் மூலம் வாழும் சமூகத்திற்குப் பங்களிக்கவும் உதவுகிறது.
கல்வி ஒருவருக்குப் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், அதனை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது. அப்படி ஒருவர் கல்வியால் தம் அறிவையும் திறன்களையும் உயர்த்திக் கொள்வதன் மூலம் அவை வாழ்க்கையில் முன்னேறவும், வாழ்க்கை இலக்குகளை அடையவும் உதவுகின்றன.
கல்வி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. கல்வி கற்றவர்கள் சமுதாயத்தில் நல்ல குடிமக்களாகவும். பொறுப்புள்ளவர்களாகவும் செயல்படுவார்கள். கல்வி சமூகத்தில் உள்ள அறியாமை மற்றும் வறுமையை ஒழிக்க உதவுகிறது. கல்வி சமூகத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. கல்வி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. இது ஒரு சமூகத்தில் நீதியை நிலைநாட்ட உதவுகிறது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை மிகச் சிறந்த குடிமக்களாக உருவாக்கிட பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவு என்பது மிக மிக நுட்பமானது. இதனை இத்தருணத்தில் நினைவு கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
கல்வி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், தனி மனிதனின் மேம்பாட்டிற்கும் இன்றியமையாதது. எனவே, கல்வியைப் பெறுவதும், அதைக் கற்பிப்பதும் மிகவும் முக்கியப் பணிகளாகும்......
0 Comments