முன்னுரிமை ஒன்றியங்களில் (Priority Blocks) 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 முன்னுரிமை ஒன்றியங்களில் (Priority Blocks) 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Click here





பார்வை-3ல் காணும் செயல்முறைகளின்படி 2025-26ம் கல்வியாண்டிற்கு அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS Online)-யில் விண்ணபிப்பது சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.



பார்வை-2ல் காணும் செயல்முறைகளில் 2021-22 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசாணை (நிலை) எண்.176 ப.க.து நாள்.17.12.2021 தெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி அலகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சார்பான நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில் ஒட்டுமொத்த ஒன்றியங்களில் அதிகளவு எண்ணிக்கையில் காலிப்பணியிடம் உள்ள ஒன்றியங்களிலிருந்து 10 விழுக்காடுகளுக்கு மிகாமல் முன்னுரிமை ஒன்றியங்களாக (Priority Block) தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு அவற்றில் 40 ஒன்றியங்கள் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)



2022 ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மேற்காண் அறிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை ஒன்றியங்களுக்கு (Priority Block) மாறுதல் ஆணை பெற்று தொடர்ந்து நாளது தேதி வரை (3ஆண்டுகளுக்கு மேல்) பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தற்போது நடைபெறவிருக்கும் (2025-26 கல்வியாண்டிற்கு மட்டும்) பொது மாறுதல் கலந்தாய்விற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்தால் அவர்களுக்கு அரசாணை (நிலை) எண்.176 விதி 2(d)vன் கீழ் தெரிவித்துள்ளபடி முன்னுரிமை வழங்கப்படும்.

cckkalviseithikal

இக்கல்வியாண்டில் நடைபெறவிருக்கும்

எனவே பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மேற்காண் முன்னுரிமையினை தெரிவு செய்யும் பட்சத்தில் (Priority Block) அவ்வாசிரியர்கள் பார்வை-2ல் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ள முன்னுரிமை ஒன்றியத்தில் 2022ம் ஆண்டில் மாறுதல் ஆணை பெற்றுள்ளார்களா என்பதையும் தொடர்ந்து 3 ஆண்டுகள் அவ்வொன்றிய பள்ளியிலேயே பணிபுரிந்துள்ளார்களா என்பதையும் உறுதி செய்த பின்னரே முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்புதல் Approval அளிக்கப்படவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் அறிவுறுத்தப்படுகிறது. கல்வி அலுவலர்களுக்கு

இணைப்பு: பார்வை-2ல்

காணும் கடித நகல்

cckkalviseithikal

பள்ளிக் கல்வி இயக்குநர்

Post a Comment

0 Comments