கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு கட்டுவதற்குத் தடை.

 கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு கட்டுவதற்குத் தடை.




கோவை மாவட்டத்தில் நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டணம், தேவராயபுரம், கலிக்க நாயக்கன்பாளையம், இக்கரை போளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், எட்டிமடை, மாவுத்தம்பதி. தொண்டாமுத்தூர், நாயக்கன்பாளையம், கூடலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி. சோமையம்பாளையம் போன்ற 23 கிராமங்களில் ஹாகா என அழைக்கப்படும் மலையிடப் பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 


இங்கே வீடு, கட்டடங்கள் கட்ட உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதி வழங்கப்படுவதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகள் எந்த வித அனுமதி யும் இன்றி கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 


கல்வி மற்றும் பல்வேறு வணிக வர்த்தக ரீதியான கட்டடங்களும் ஏக்கர் கணக்கில் அமைந்திருக்கின்றன.


ஹாகா அனுமதியின்றி எப்படி இந்த கட்டடங்கள் உருவானது, யார் அனுமதி வழங்கினார்கள், எப்படி வரி விதிக்கப்பட்டது என்ற சர்ச்சைகளும் நீடிக்கிறது. 


ஹாகா கிராமங்களில் உள்ள மனையிடங்களை முறைப்படுத்த, கடந்த ஆண்டில் நகர் ஊரமைப்பு துறையின் மூலமாக உத்தரவு வெளியானது.


இதில், ஹாகா கிராமங்களில் உள்ள மனையிடங்களை முறைப்படுத்த ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில், மனையிடங்கள் தொடர்பான ஆவணங்கள், பட்டா மற்றும் வருவாய்த் துறை, கனிம வளத்துறை, வனத்துறை, வேளாண் பொறியியல் துறையிடம் தடையின்மை சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


கடந்த காலங்களில் மனையிடங்கள் வரன்முறைப்படுத்த இத்தனை அரசு அலுவலகங்களில் சான்று பெறவேண்டும் என தெரிவிக்கப்படவில்லை. ஹாகா கிராமங்களில் பலமனைகள் பட்டா இன்னும் பெறாத நிலைமை இருக்கிறது. பட்டா வாங்கவே மக்கள் படாதபாடு படுகின்றனர். இந்த நிலையில் பட்டா வாங்கி, 4 அரசு துறைகளிடம் தடையின்மை சான்று பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்து, பின்னர் பஞ்சாயத்து அலுவலகம் சென்று அப்ரூவல் வாங்குவது சாதாரணமான காரியமில்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதில், வேளாண்பொறியியல் துறையிடம் மட்டும் கையெழுத்து அவசியம் இல்லை என சலுகையில் சற்று தளர்வு தரப்பட்டது. சிலர், உரிய சான்று பெற்று விண்ணப்பங்கள் வழங்கினர். சில அரசுதுறையினர் கையெழுத்து போட மறுப்பதாக கூறியும் விண்ணப்பம் அளித்தனர். 


நீண்ட காலத்திற்கு பின் 23 கிராம மக்கள் அளித்த பல ஆயிரம் விண்ணப்பங்கள் இன்னும் ஊரமைப்பு அலுவலகத்தில் கிடப்பில் இருக்கிறது. இதற்கு விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும்.


 தொண்டாமுத்தூர். ஆலாந்துறை, பேரூர் செட்டிபாளையம், எட்டிமடை போன்ற கிராமங்கள் நகருக்கு இணையாக வளர்ந்து விட்டன. பள்ளிகள், கல்லூரிகள், பெரிய கட்டடங்கள் நிறைந்த இந்த பகுதிக்கு ஹாகா ஏரியா என விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதகமாகவே இருக்கிறது. ஹாகா கிராமங்களில் மனையிட அங்கீகாரம் எளிதாக்க மாவட்ட நிர்வாகம் தேவையான திட்டமிடல் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments