தலைமையாசிரியர்கள் 360 டிகிரி கோணத்தில் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

 தலைமையாசிரியர்கள் 360 டிகிரி கோணத்தில் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்.





ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள், பிள்ளைகள் எப்படி நடந்து கொள்கிறார்கள், பள்ளிக்கு யார் வருகிறார்கள் என தலைமையாசிரியர்கள் அனைவரும் 360 டிகிரி கோணத்தில் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.


சென்னை மாவட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கற்றல் அடைவு ஆய்வுக் கூட்டம் புரசைவாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமைவகித்துப்பேசியது:


கற்றல் அடைவு தொடர்பாக இதுவரை 15 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, 16-ஆவது மாவட்டமாக இந்தக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்தில் பிற மாவட்டங்களை விட தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை போக மீதமுள்ள பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்ற ஒரு மிகப் பெரிய பணியை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.


பின் தங்கிய பள்ளிகளில்


சென்னையில் திருவொற்றியூர், கோடம்பாக்கம், ராயபுரம் வடக்கு பகுதியை சார்ந்திருக்கின்ற பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. அடையாறு, தண்டையார் பேட்டை, ராயபுரம் தெற்கு, தேனாம் பேட்டை, ராயபுரம், சென்ட்ரல் பகுதியை சார்ந்திருக்கின்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் முயற்சி செய்தால் அடுத்த கட்ட உயர்வுக்கு போகலாம். அண்ணாநகர், திருவிக நகர் பள்ளிகள் பின்தங்கி உள்ளன. எனவே, அந்தப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


மணற்கேணி, திறன், டி.எஸ் ஸ்பார்க், மாதிரிப் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறை போன்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். அவற்றை சிறப்பாக நாம் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்க வேண்டும். தலைமையாசிரியர்கள் அனைவரும் 360 டிகிரி கோணத்தில் பள்ளியைக் கண்காணிக்க வேண்டும். 


ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள், பிள்ளைகள் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் எவ்வாறு பணியாற்றுகிறார்கள், பள்ளிக்கு யார் வருகிறார்கள் என அனைத்து வகையிலும் பள்ளியை கண்காணிக்க வேண்டும்.


கற்றல் அடைவை உறுதி செய்ய: 

குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைவருக்கும் தேர்ச்சி வழங்குகிறோம். மூன்றாம் வகுப்பு படித்த பிள்ளைகள் அந்த வகுப்பில் படிக்க வேண்டியதை, படித்துவிட்ட பிறகு தான் 4-ஆம் வகுப்புக்கு செல்கிறார்களா என்பதை கற்றல் அடைவு ஆய்வு (ஸ்லாஸ்) மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லாமல் ஒவ்வொரு தலைமையாசிரியரும் அதனை உறுதி செய்தல் வேண்டும்.


cckkalviseithikal


அரசுப் பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமாக மாணவர் சேர்க்கைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை வகுப்பறைகளில் அமர வைப்பது மட்டும் போதாது, அவர்களை தேர்ச்சி பெறச் செய்வது, அதிக மதிப்பெண் பெறச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளிகளைத் தேடி வந்து படிப்பதற்காக இன்னும் அதிகப்படியான பிள்ளைகள் வர வேண்டும் என்றார்.


இக்கூட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மு.பழனிச்சாமி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். அ.புகழேந்தி, அரசு உயர் அலுவலர் கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments