அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 100 தலைமை ஆசிரியர்கள் விவரம் வெளியீடு.

 அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 100 தலைமை ஆசிரியர்கள் விவரம் வெளியீடு.

Click here




பார்வையில் கண்ட அரசாணையின்படி, அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறும் ஆசிரியர்களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.


அதன்படி அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் திருச்சிராப்பள்ளி, தேசியக் கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் 06.07.2025 அன்று நடைபெற உள்ளது.


எனவே தங்கள் மாவட்டத்தில் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் ஊக்கத் தொகை தலா ரூ.10 இலட்சம் மற்றும் அப்பள்ளி தலைமையாசிரிருக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்படவுள்ளது.


அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இணைப்பில் கண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்கண்ட தேசியக் கல்லூரி வளாகத்திற்கு பிற்பகல் 02.00 மணியளவில் வருகை தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தெரிவு செய்யப்பட்ட தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இல்லை என்பதை மீளவும் உறுதி செய்து தலைமையாசிரியர்களை சார்ந்த பள்ளியிலிருந்து விடுவித்து தகுந்த கடிதம் மற்றும் ஆளறி சான்றிதழுடன் இவ்விழாவில் கலந்து கொள்ளத்தக்க வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும் விருது வழங்கும் விழாவிற்கு வரும் தலைமையாசிரியர்களுக்கு போக்குவரத்து / தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றினை அவரவர்களே தனது செந்த செலவில் செய்து கொள்ள தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


இணைப்பு விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட பள்ளி / தலைமையாசிரியர்களின் பட்டியல்

பள்ளிக் கல்வி  இயக்குநர்

Post a Comment

0 Comments