இதர பாடங்களில் ஊக்க ஊதியம் பெற்ற 766 ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் திருப்பி செலுத்த உத்தரவு

 இதர பாடங்களில் ஊக்க ஊதியம் பெற்ற 766 ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் திருப்பி செலுத்த உத்தரவு.


கற்பிக்கப்படாத இதர பாடங்களுக்கு உயர் கல்வி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டவர்களேக்கு, ஊதிய மறு நிர்ணயம் செய்து அரசுக் கணக்கில் செலுத்த உத்தரவு.

தவறுதலாக ஊதிய உயர்வு வழங்கியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Proceedings 👇 

Click here






தொடக்கக் கல்வித் துறையைப் பொறுத்த வரையில் கற்பிக்கப்படாத இதர பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவது குறித்து அரசிடமிருந்து எவ்வித அரசாணைகளோ, அரசுக் கடிதங்களோ மற்றும் வழிகாட்டுதல்களோ இதுவரை வெளியிடப்படவில்லை. பார்வை 5-ல் காணும் அரசாணையில் முன்னுரிமை இருந்தும் இதுவரை நியமனத்திற்கு தகுதி பெறாத பொருளாதாரம், வணிகவியல் போன்ற பாடங்களில் 01.01.2007 அன்றைய நிலவரப்படி பட்டம் பெற்றவர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும், பதவி உயர்வு மட்டும் அளிக்கலாம் எனவும், 01.01.2007-க்குப் பிறகு இதர பாடங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு மேற்படி பதவி உயர்வு சலுகை நீட்டிக்கப்படமாட்டாது என்ற நிபந்தனைக்குட்பட்டு பதவி உயர்வு வழங்கலாம் என ஆணையிடப்பட்டது.



மேற்காணும் அரசாணையின்படி பார்வை 3-ல் காணும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.



cckkalviseithikal

தொடக்கக் கல்வியின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் /தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் முதன்மைப் பாடங்களான (தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்கு, சமூக அறிவியல்) பாடங்களை பட்டப் படிப்பில் பயின்று உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே, ஊக்க ஊதிய உயர்வு பெற இயலும். இதனைத் தவிர்த்து பிற பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு கற்பிக்கப்படாத பாடங்களைப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்தால் அவ்வாசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வோ. பதவி உயர்வோ. வழங்க இயலாது என அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தவறுதலாக ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்டது ஏற்புடையதல்ல.



எனவே பார்வை 2-ல் காணும் அரசு நேர்முகக்கடிதத்தில், பார்வை 1-ல் காணும் 21.01.2025 நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்தி அனுமதிக்கப்பட்ட பாடங்களைத் தவிர இதர பாடங்களை பயின்று தவறுதலாக உயர்கல்விக்கான ஊக்க ஊதியத் தொகையினை பெற்று வரும் ஆசிரியர்களிடமிருந்து உரிய அலுவலர் அளவில் அத்தொகையினை பிடித்தம் செய்து, அதன் விவரத்தினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும். மேலும், இவ்வாறு தவறுதலாக ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினையும் 20.06.2025-க்குள் அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.



எனவே, பார்வை 1-ல் காணும் தீர்ப்பாணை மற்றும் பார்வை 2-ல் காணும் அரசுக் கடிதத்தின்படி, மேற்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி மாவட்டங்களைச் சார்ந்த ஆசிரியர்களிடமிருந்து தவறுதலாக வழங்கிய ஊக்க ஊதிய உயர்வுக்காக, அதிகம் பெற்ற ஊதியத்தினை, திரும்ப அரசு கணக்கில் செலுத்தப்படும் வகையில், தனிக்கவனம் செலுத்தி, எவ்வித காலதாமதமும் செய்யாமல், திருத்திய ஊதிய நிர்ணய ஆணையினை வழங்கிவிட்டு, எவரது பெயரும் விடுபடாமல் பெயர்ப் பட்டியலுடன் ஆணையின் நகலினை 20.06.2025-க்குள் தனிநபர் மூலம் இவ்வியக்கக "இ" பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.



மேலும், தவறுதலாக ஊக்க ஊதிய உயர்வு வழங்கிய அலுவலர். கண்காணிப்பாளர் மற்றும் இருக்கைப் பணியாளர் அனைவரின் மீதும் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தினை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறும், இதில் ஏதேனும் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

(தொடக்கக் கல்வி).

cckkalviseithikal

தொடக்கக் கல்வி இயக்குநர்


Post a Comment

0 Comments