ஊக்க ஊதிய உயர்வு Incentive increment பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
Click here
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் ( Economic, Commerce...) உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
ஊக்க ஊதியம் வழங்கப்பட்ட விவரத்தினை மே 26, 27 தேதிகளில் இயக்குநரகத்தில் ஒப்படைக்க உத்தரவு.
விவரம் 👇
பொருள்:
தொடக்கக் கல்வி வழக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு. இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது. உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையினை 05.2025-க்குள் சமர்பிக்க கோரல் சார்ந்து
பார்வை
1. சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை வழக்கு W.PMD)22704 of 2018 dr.05.112024, 11:12:2024 21012025
2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கடிதம் ந.க.எண்.5067.ஆ3.2022 நாள். 03.03.2026
3. 11527/EE12)/2024-2 dated:20.03.2025
மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காணும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் கல்வி மாவட்டம் திருவாடனை ஒன்றியம், முகிழ்தகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் (ஆங்கிலம்) பணிபுரியும் திரு.எஸ்தாஹர் முகம்மது என்பவர் M.Com உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் 16.12.2024ல் கீழ்காணுமாறு தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
cckkalviseithikal
4. In view ofthis submission made by the petitioner's Counsel, the learned Additional Government Pleader is directed to get instructions as to
1) Whether any BT Assistant/Secondary Grade Teacher is being provided with incentive increment for their additional qualification of M.Com/M.A (Economics) throughout the state? And
ii) if so, how many persons are receiving the incentives and what is the stand of Government in so far as such persons are concerned?
21.01.2025-ல் கீழ்காணுமாறு இறுகி தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
"9.In view of the foregoing reasons and discussions, this writ petition is dismissed. Hope the Government shall find out the ineligible teachers, who are receiving incentive increments for their higher qualification without any relevancy and to take appropriate action to recover the same, as it is a loss to the public exchequer. No costs. Consequently, connected Miscellaneous Petitions are closed.
List this writ petition on 21.03.2025, for reporting compliance by the Government,
தெரிவிக்கப்பட்டுள்ளது-
மேற்படி தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தினை தீர்ப்பாணையில் தெரிவித்துள்ளவாறு மறு ஊதிய நிர்ணயம் செய்ய பணிப் பதிவேடு வாரியாக ஆய்வு செய்து, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை குறிப்பிடுள்ளவாறு பூர்த்தி செய்து ஒன்றிய வாரியான அறிக்கையினை தொகுத்து நீதிமன்றத்தில் சமர்பிக்க ஏதுவாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலக (தொடக்கக் கல்வி) பிரிவு கண்காணிப்பாளர் 26.05.2025 மற்றும் 27.05.2025 அன்று கீழ்காணும் அட்டவணையின்படி இவ்வியக்ககத்திற்கு நேரில் வருகைபுரிந்து தொடக்கக் கல்வி இணை இயக்குநரிடம் (நிர்வாகம்) ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.
பார்வையில் காணும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பாணையின்படி தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடப்பிரிவுகளில் இச் செயல்முறைகள் வெளியிடப்படும் நாளுக்கு பின்னர் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் பெறுவது கண்டறியப்பட்டால் சார்ந்த அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
பார்வையில் காணும் தீர்ப்பாணையின் மீது தனி கவனம் செலுத்தி துரித மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் காரணங்களை சுட்டிக்காட்டி காலதாமதத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
cckkalviseithikal
0 Comments