நீண்ட நாட்கள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை (GPF, DCRG, CPS) விரைவாக முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 நீண்ட நாட்கள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை (GPF, DCRG, CPS) விரைவாக முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Click here




மேற்காணும் பொருளில் குறிப்பிட்டுள்ளபடி தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து அலுவலர்கள்/ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஓய்வு பெற்ற/ ஓய்வு பெற உள்ளவர்களின் ஓய்வூதியக்கருத்துருக்கள் சார்ந்த விவரங்கள் சென்னை மாநிலக்கணக்காயர்/கருவூலக்கணக்கு ஆணையரகத்திற்கு அனுப்பப்பட்டு அனைத்து பணியாளர்களின் ஓய்வூதிய பணப்பலன்கள் விரைந்து பெற்று வழங்கிட இயக்குநர் அவர்களால் தனிகவனம் செலுத்தப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு நிலுவை இனங்கனை குறைப்பதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் மேற்படி பொருள் தொடர்பாக 07.052025 அன்று சென்னை நிதித்துறை செயலர் அவர்கள் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

cckkalviseithikal

ஏப்ரல் 2024 முதல் ஏப்ரல் 2025 வரையுள்ள காலங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் GPF DCRG மற்றும் CPS நிலுவையினங்கள் அதிக அளவு உள்ளது.

2 மேற்படி இனங்களை சிறப்பு கவனம் செலுத்தி 3152025 க்குள் மேற்படி நிலுவை இனங்களை முடிவு செய்யப்படவேண்டும்.

3. இனி வாரந்தோறும் மேற்படி பொருள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்.

4. மே 2025 முதல் அக்டோபர் 2025 வரையுள்ள காலங்களில் ஓய்வு பெறவிருக்கும் பணியாளர்களின் விபரங்களும் கூட்டத்தில் பகிரப்பட்டு அவற்றில் மே 2025 மற்றும் ஜூன் 2025 மாதங்களுக்குரிய நிலுவை இனங்களை 31.05.2025 க்குள் முடிவு செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments