10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த கிராமத்தின் முதல் நபர் என்ற சாதனையைப் படைத்த மாணவன் மற்றும் பெற்றோரை அழைத்து ஆட்சியர் பாராட்டு.

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த கிராமத்தின் முதல் நபர் என்ற சாதனையைப் படைத்த மாணவன் மற்றும் பெற்றோரை அழைத்து ஆட்சியர் பாராட்டு.




 உத்திரப் பிரதேசம் : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த கிராமத்தின் முதல் நபர் என்ற சாதனையைப் படைத்த 16 வயது மாணவன் ராம்கேவல். மாணவன், பெற்றோரை அழைத்து ஆட்சியர் பாராட்டு.


தலைநகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் பராபங்கி மாவட்டத்தில், பட்டியல் சமூகத்தினர் 300 பேர் வசிக்கும் நிஸாம்பூரைச் சேர்ந்த இவர், ஊர்வலத்தில் விளக்கு சுமக்கும் வேலை செய்து படிப்புச் செலவை சமாளித்தார்.


மின்சார வசதி இல்லாத வீட்டில், சோலார் விளக்கில் படித்து தேர்ச்சி பெற்ற இவரைப் பார்க்க, ஆட்சியர் அழைத்ததும் பள்ளி ஆசிரியர் புதிய ஆடை, ஷூ வாங்கிக் கொடுத்துள்ளார்.


மாவட்ட ஆட்சியர் நேரில் பார்க்க அழைத்ததும், என்னிடம் நல்ல உடைகள் இல்லை. பள்ளி ஆசிரியர் வாங்கித் தந்த உடை, ஷூ அணிந்து சென்றேன்.


வாழ்க்கையில் முதல் தடவையாக ஷூ அணிந்தது அப்போதுதான் என் மாணவர் தெரிவித்தார்.


ஆட்சியர் பாராட்டியதுடன், உயர் கல்விக்கான கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

Post a Comment

0 Comments